Saturday 18 April 2015

இந்தியாவின் முதல் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அல்ல.



இந்தியாவில் இருந்து. முதன் முதலில். உலக அழகி பட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டது யார். நாம் எல்லோரும் நினைப்பதை  போல். ஐஸ்வர்யா ராய் அல்ல. நான் கூட . முதலில் அப்டி தான்  நினைத்தேன். சென்ற தமிழ் புத்தாண்டு அன்று. இந்தியாவின் முதல் ஆனழகன் ராஜேந்திரன் மணி பற்றி போட்ட பதிவில் கூட.  ஐஸ்வர்யா ராய் இந்தியாவின் முதல் உலக அழகி என்பது எல்லாருக்கும் தெரியும். ராஜேந்திரன் மணி இந்தியாவின் முதல் உலக ஆனழகன் என்பது. உங்களில் எவ்வளவு பேருக்கு தெரியும் என்று போட்டு இருந்தேன். அதன்  பின்னர். இப்பொழுது எதேர்ச்சையாக ஒரு பொது அறிவு நுல்  படித்த பொழுது. நான் அப்டியே ஷாக் ஆய்ட்டேன்.

 காரணம். இந்தியாவின் முதல் உலக அழகி. 1997 இல் உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் அல்ல. அதற்கு  31 வருடங்களுக்கு முன்பே ஒரு இந்திய பெண். உலக அழகி பட்டம் பெற்று உள்ளாள். அந்த பெண்ணின் பெயர். Reita Faria. இந்தியாவின் முதல் உலக அழகியை நீங்கள் பார்க்க வேண்டுமா. போனா வராது, பொழுது போனா கிடைக்காது.  வாங்க, வாங்க. எல்லாரும் கீழ உள்ள படத்தை பாருங்க மக்களே.




 

reita, ஐஸ்வர்யா. ரெண்டு  பேருக்கும்  உள்ள ஒரு ஒற்றுமை. ரெண்டு பேருமே. மும்பை. ஐஸ்வர்யா. mbbs  டிராப். Reita  வோ அதுல  டாப். உலகத்துலையே. ஒரு டாக்டர் உலக அழகி பட்டம் வாங்கினானா.  அது  ரெய்டா  தான். சரி. Reita. எப்பொழுது உலக அழகி பட்டம் வென்றாள்  தெரியுமா.

 17/11/1966.

Monday 2 February 2015

எல்லாரும் இயக்குனர் ஆகலாம் வாங்க, எல்லாரும் ஹீரொ ஆகலாம் வாங்க.




உங்களில் யாருக்கேனும் திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் என்கிற ஆசை, திறமை இரண்டும் இருந்தும் அந்த வாய்ப்பிற்காக நீங்கள் காத்து கொண்டிருக்கிறீர்களா. திறமை சாலிகள் வாய்ப்பிற்காக காத்து கொண்டிருக்க மாட்டார்கள். வாய்ப்பை உருவாக்குவார்கள். நீங்கள் சினிமா இயக்குனர் ஆக வேண்டும் என்றால் தினமும் பல கம்பனிகள் ஏறி இறங்க வேண்டும், பலர் கை, காலை புடிக்க வேண்டும், Pro களுக்கு நிறைய மொய் எழுத வேண்டும். இத்தனையும் தாண்டி நீங்கள் இயக்குனர் ஆக வேண்டும். சில படங்கள் இன்று பாதி எடுக்கும் பொழுதே நின்று விடுகிறது. பல படங்கள் எடுத்து முடித்தும் அதை வெளியிட தியேட்டர் கிடைக்கவில்லை. அவ்வாறு தியேட்டர் கிடைத்தும் சில நல்ல கதை அம்சங்கள் உள்ள படங்களே தோல்வியை தழுவி விடுகிறது.
வருடத்திற்கு நூறு படங்கள் வந்தால் அதில் 20 படங்களே வெற்றி பெறுகிறது. இதற்க்கு முன் இயக்குனர் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் யாரேனும் ஒரு இயக்குனரிடம் அசிஸ்டன்ட்டாக சில வருடங்கள் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருந்தது. இன்று அந்த அவசியம் இல்லை. இன்று டெக்நாலஜீ மட்டும் அல்ல. இன்றைய இளைங்கர்களின் மூளையும் மிக அட்வான்ச்சாக உள்ளது. கையில் பேப்பர், பேனா எடுத்து ஸ்க்ரிப்ட் எழுதுவதோடு நாளைய இயக்குனர் ஆக நினைக்கும் இன்றைய இளைங்கர்கள் நிறுத்தி விடுவதில்லை. ஒரு ஐந்து நிமிடத்தில் இருந்து ஆரம்பித்து, பத்து, பதினைந்து நிமிடங்கள் வரை வரும் குறும்படங்களையும் எடுக்கிறார்கள். இன்று தயாரிப்பாளர்கள், கதா நாயகர்களிடம் வாய்ப்பு கேட்கும் பொழுது கூட பலர் அவர்கள் கதை எழுதிய ஃபைல்லோடு எடுத்த ஷார்ட் பிலிமை காட்டுகிறார்கள். அந்த குறும்படங்களை வெய்த்தே நீங்கள் லக்ச கணக்கில் பணம், புகழ் இரண்டையும் சம்பாதிக்கலாம். எப்படி? யூ ட்யூப் channel மூலம். மீண்டும் சொல்கிறேன். திறமை சாலிகள் வாய்ப்பை தேடி அது கிடைக்கவில்லை என்றால் புதிதாக ஒரு வாய்ப்பை உருவாக்குவார்கள். இதற்க்கு என்று நீங்கள் யாருக்காகவும் வாய்ப்பை கேட்டு கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள், உங்கள் நண்பர்கள் இரண்டு, மூன்று பேர் ஒன்று சேர்ந்தே ஒரு ஷார்ட் பிலிம் எடுத்துடலாம். நீங்கள் ஒருவராகவும் செய்யலாம்.
நீங்களே பெரும்பாலான நேரங்களில் வீட்டில், ஆஃபீஸ் ப்ரேக்கில் அவ்வாறு சில ஷார்ட் பிலிம் வீடியோஸ் பார்த்து இருப்பீங்க. உங்கள் வாழ்வில் ஏதேனும் ஒரு சுவாரஸ்யமான விசயம் நடந்தால், அதை வெய்த்தே ஒரு ஐந்து நிமிடத்திற்க்கு உங்கள் நண்பர்கள், குடும்பத்தினரை வெய்த்தே ஒரு குறும்படம் எடுக்கலாம். உங்களுக்கு நிறைய ஜோக் தெரியும். நல்லா பேச தெரியும்னால் அதை வெய்த்தே நீங்கள் ஐந்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் வரை வரக்கூடிய வீடியோஸ் நிறைய எடுத்து வாரத்துக்கு ரெண்டு, நாலு மூவீஸ் ஃப்ரீயா ரிலீஸ் பண்ணி heavy ammount பார்க்கலாம். அதுக்கு டிஸ்‌ட்ரிப்யுடர் வேண்டாம், தியேட்டர் கிடைக்குமா கிடைக்காதா என்னும் கவலை வேண்டாம். எதுவுமே வேண்டாம். ஸிநிமானால் அதுல chance கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம். அதுல பணம் வரலாம். ஆனால் வராமல் போகலாம். யூ ட்யூப் channel அப்டினு எடுத்துன்டால் வரும் ஆனால் வராது அப்டிங்கர பேச்சே கிடையாது. கண்டிப்பாக நீங்கள் போடும் வீடியோகளுக்கு ஆயிரக்கணக்கில் காசு, பணம் துட்டு, மணி வரும். அதை விட முக்கியமாக. உங்களின் படைப்புகள் உடனடியாக மக்களிடம் போய் சேரும்.
பத்து லக்சம், இருபது லக்சம்னு வ்யூ போற யூ ட்யூப் ஷார்ட் பிலிம்ஸ் பல இருக்கு. நீங்களே இப்பொழுது யூ ட்யூப்பில் சில நிமிடங்கள் பாருங்கள். நல்ல தரமான ஸ்க்ரிப்ட், மற்றும் யூ ட்யூப் channel எப்டி ஆரம்பிக்கர்து. ஆரம்பித்து அதிக அளவில் உங்கள் குறும்படங்களை பலர் பார்க்க என்ன செய்வது என்கிற கவலை உங்களுக்கு வேண்டாம்.
உங்கள் படைப்புகளை அதிக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் சில Special tools, Tricks எங்களுக்கு தெரியும். உங்களுக்கு யூ ட்யூப் channel ஆர்ராம்பித்து கொடுப்பதோடு நாங்கள் நிறுத்தி விட மாட்டோம். அதை ப்ரமோட் பண்ணுவதற்கான வழிமுறைகளையும் நாங்களே உங்களுக்கு சொல்லி கொடுப்போம். ஸிநிமா துறையில் இருப்பவர்களுக்கு தெரியும். அசிஸ்டன்ட் டைரெக்டர்ஸ் அஸோஸியேஶந்ல நீங்கள் ஒரு அடிப்படை உறுப்பினராக ஆக வேண்டும் என்றாலே அதற்க்கு எவ்வளவு தொகை செலவு செய்ய வேண்டும் என்று. நாங்கள் உங்களுக்கு யூ ட்யூப் channel ஆரம்பித்து கொடுத்து அதை ப்ரமோட் பண்ண வெறும் 1000 ரூபாய் மட்டுமே ஸர்விஸ் சார்ஜ் வாங்குவோம்.
எங்களுக்கு லக்சங்கள் ஒரு பெரிய விசயமே அல்ல. ஸிநிமா இயக்குனர் ஆகும் லக்சியம் தான் முக்கியம் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் எண்ணம் தவறில்லை. ஸிநிமா இயக்குனர் ஆகும் வரை, ஸிநிமாவில் பாடுவதற்கு முன் விஜய் டீவீ சூப்பர் ஸிங்கர்ரில் பாடுவது, ஸிநிமா இயக்குனர் ஆகி படத்தை தியேட்டர்ரில் வெளியிடும் முன் கலைங்கர் டீவீ
நாளைய 



இயக்குனர் நிகழ்ச்சியில் படங்களை வெளியிடுவது போல் தான் இதுவும். நீங்கள் ஸிநிமாவில் இயக்குனர் ஆகும் வரை கௌரவமாக வாழ்வதற்கு மட்டும் அல்லாமல் உங்கள் யூ ட்யூப் மூவீயே கூட நீங்கள் ஸிநிமா உலகில் அடி எடுத்து வெய்ப்பதர்க்கு உதவலாம். பொழுது போக்காக கூட இதை யார் வேண்டுமானாலும் செய்து காசு ஆக்கலாம்.
ஒரு சிறிய உதாரணம். மணிரத்னம் அவர்கள் எடுத்த கடல் படம் ப்லாப். ஆனால் அந்த படத்தின் ட்ரைலர் ஹிட். அதன் மூலம் பணக்காரராக இருந்த மணிரத்னம் மேலும் பணக்காரர் ஆகி விட்டார். யூ ட்யூப் மூலம் இவ்ளோ பண்ணலாம் என்பது ஸிநிமா துறையில் உள்ளவர்களுக்கே பலருக்கு தெரிவதில்லை.
இந்த பொன்னான வாய்ப்பை நீங்கள் பயன்படுத்துவதோடு மட்டும் அல்லாமல், பலருக்கு சென்றடைய இதை அதிகம் பகிருங்கள்.
Contact- 8939797969, 9445671614

Sunday 1 February 2015

சந்திர மேகலா



சந்திரு. தனது காதலியை வழக்கமாக சந்திக்கும் பார்க்கிற்கு வர சொன்னான். அப்பனு பார்த்து அவன் பாஸ் முன் அறிவிப்பு இன்றி வீடு தேடி வந்தார். ஒண்ணுமில்லை. அவர் தங்கைக்கு கல்யானம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கல்யான பத்திரிகையை கொடுக்க வீட்டிற்க்கு வந்தார். ஒரு முதலாளி போல் அல்லாமல் நண்பரை போல் சந்திருவின் அதிகாரி பரத்வாஜ் பழகுவார். சந்திருவிடம் மட்டும். காரணம். சந்திரு இதற்க்கு முன் யாருக்கோ அடிபட்டது என்று உயிரை காப்பாற்ற ரத்தம் கொடுத்தான். பார்த்தால் அந்த யாரோ, வேறு யாரோ அல்ல. அவன் முதலாளி பரத்வாஜ். பின்னர் பரத் வாஜ்க்கு உண்மை தெரிந்தது. அதுக்கு அப்புறம் அந்த கம்பனியில் முதலாளிக்கு உள்ள அனைத்து மரியாதை, அதிகாரம், செல்வாக்கும் சந்திருக்கு வந்தது. அந்த கம்பனி ஆஃபீஸ் ஸ்டாப்பா இருந்த சந்திரு அந்த கம்பனியின் Co ஆனான்.
வெரும் ரத்தம் கொடுத்ததற்காக நமக்கு இந்த பதவி வந்தது என்பதை போல் பிறர் நம்மை பேச கூடாது என்று அல்லும் பகலும் கடுமையாக கம்பனியின் வளர்சிக்காக அவன் உழைத்தான். அவனது பல புது வித யுக்திகளால் அந்த கம்பனி எங்கயோ போனது. ஒரு நாள் பரத்வாஜ் சந்திருவை சந்தித்து. நான் எப்படி இருந்தாலும் என் தங்கச்சியை யாரோ ஒருத்தனுக்கு கட்டி கொடுக்க போகிறேன். அந்த யாரோ ஒருத்தன் ஏன்? நீயா இருக்க கூடாதுனு அவர் கேட்டவுடன். சந்திரு துளி கூட பதட்டப்படாமல், பயப்படாமல் நான் ஏற்கனவே ஒரு பெண்ணை மூன்று வருடங்களாக காதலித்து கொண்டு இருக்கிறேன். அவள் சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண் தான். ஆனால் இக்கால பெண்கள் யாருக்குமே இல்லாத அசாதாரனமான நர் குணங்கள் வாய்ந்தவள் அவள். அவளுக்கு என்னால் திரோகம் செய்ய முடியாது. என்று சொன்னதும். பரத் வாஜ் முகம் மாறியது.
நம்பளே தேடி வந்து, என் தங்கச்சியை உனக்கு தரேன்னு சொல்லியும் துளி கூட இவனுக்கு முதலாளினு பயமும் இல்லை. பணத்தின் மேல் ஆசையும் இல்லை. ஆசை, பயம் இரண்டும் இல்லாத மனிதனா? என்று பரத்வாஜ் ஆச்சரியத்து அதிசயித்து. சந்திரு மேல் அவருக்கு உள்ள அன்பு வெறும் அன்பாக இல்லாமல் மரியாதை கலந்த அன்பாக மாறியது.
அத்தகையவர் வீடு தேடி வந்து இருக்கும் பொழுது சந்திருவால் என்ன செய்ய முடியும். தனது பதட்டம் எதையும் அவன் வெளி காட்டி கொள்ளவில்லை. பரத்வாஜ். நீண்ட நேரம் அவனுடனும் அவன் அம்மா, அப்பா, தம்பி என்று அனைவரிடமும் பேசி கொண்டு இருந்தார். பரத் வாஜ்ஜின் மனைவி தீபிகாவும் உடன் வந்திருந்தாள். உனக்கு எப்போ கல்யாணம் என்று பரத் சந்திருவை பார்த்து கேட்க்க. சந்திரு - என் காதலியின் அக்காவிற்கு இப்பொழுது தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஐந்தாம் தேதி நிச்சயதார்த்தம். முதல் பத்திரிகை உங்களுக்கு தான் கொடுப்பேன் என்று சொல்ல. பரத் வாஜும் மிக்க மகிழ்ச்சி என்று சொன்னபடியே அங்கிருந்து கிளம்பினார்.
அவர் கிளம்பிய அடுத்த நொடி தனது புல்லட் வண்டியில் மின்னல் வேகத்தில் பார்க்கிற்கு வந்தான்.
ஒண்டரை மணி நேரம் லேட். தனது காதலியை பார்த்து மேகலா செல்லம். நான் லேட் ஆக்கிட்டேன்னு உனக்கு எதுவும் கோவம் இல்லையே என்று அவன் கேட்க்க. அவள். உங்களுக்காக நான் எத்தினை வருடங்கள் வேண்டுமானாலும் இதே இடத்தில் காத்து இருப்பேன். உங்களிடம் கோபப்படும் உரிமையும் எனக்கு இல்லை. அன்பையும், அடக்கத்தையும், பக்தியையும் காட்டும் உரிமையே எனக்கு உண்டு என்று அவள் சொன்னாள்.
இது வெறும் எனது கற்பனையில் உதித்த கதை தான். உண்மை சம்பவம் அல்ல. ஆனால்? இந்த கதையில் வருவதை போன்ற பெண் கதாபாத்திரங்கள் சிலரை நான் எனது வாழ்க்கையில் பார்த்து இருக்கிறேன்.
மொள்ளமாரிகள் நமது நாட்டில் அதிகரித்தும் வானம் மும்மாரி பெய்ய காரணமே இந்த சந்திரு, மேகலா போல் சிலர் வாழுவதால் தான்.
Story by
HV Krishna Prasad.

Tuesday 27 January 2015

‪#‎ஆத்தீ‬ , கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே!!!




நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைந்தோம் அமைச்சரே! களிப்படைந்தோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு ஃபேஸ்புக்கே குடியேன் வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

‪#‎ஆத்தீ‬ , கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே!!!